முடியும் தருவாயில் கோயம்பேடு–ஆலந்தூர் மெட்ரோ ரெயில் பணிகள் பாதுகாப்பு கமிஷனர் சான்றிதழ் வழங்கினால்தான் திறப்புவிழா நடத்தமுடியும் சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் இன்னும் முடிவு பெறவில்லை. பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு முடிக்கும் பணியும் நிலுவையில் உள்ளது.
மெட்ரோ ரெயில்
சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் பல கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதலாவதாக ரூ.4 ஆயிரம் கோடி செலவிலான முதல் கட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்துக்கான மொத்த செலவில் 20 சதவீதம் தொகைதான் இந்த...
more... ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பீடு ஆகும்.
முதல்கட்ட பணிகளை நிறைவேற்றி முடிப்பதன் மூலம் கோயம்பேட்டிலிருந்து கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் ரெயில் நிலையங்கள் வரை மெட்ரோ ரெயில் ஓட முடியும்.
பாதுகாப்பு சான்றிதழ்
இதில் சில ரெயில் நிலையங்களில் இப்போது இறுதிகட்ட பணிகள் முடிவடையவில்லை என்றாலும், இறுதிகட்ட பணிகளை விரைவில் முடித்துவிடவேண்டும் என்று ஒரு உத்வேகத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை எல்லாம் முடித்தபிறகு மெட்ரோ ரெயில் நிர்வாகம் தீ தடுப்பு, பாதுகாப்பு சோதனைகளையும், ‘எஸ்கலேட்டர்’, ‘எலவேட்டர்’ போன்ற பணிகளையும் சோதனை செய்து அதற்கான சான்றிதழ்களை மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமிஷனருக்கு அனுப்பவேண்டும்.
முடியும் தருவாயில் பணிகள்
அதன் பிறகு பாதுகாப்பு கமிஷனர் சென்னை வந்து கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரை பயணம் செய்து பாதுகாப்பு வசதிகள் எல்லாம் உரிய முறையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை நன்கு பரிசோதித்து ஒப்புதல் அளிப்பார்.
சட்டப்பூர்வமாக அனைத்து ஒப்புதல்களையும் அதிகாரப்பூர்வமாக அளித்தபிறகுதான் பயணிகள் போக்குவரத்துக்காக எப்போது மெட்ரோ ரெயில் பாதையை திறந்துவிடமுடியும் என்ற முடிவுக்கு வரமுடியும். அதன் பிறகு மெட்ரோ ரெயில் நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கு தொடக்கவிழா தொடர்பாக கடிதம் எழுதும். அந்த கடிதம் வந்த பிறகுதான் மாநில அரசு சார்பில் தேதி வழங்கியபின் திறப்பு விழா நடத்தமுடியும். இந்தநிலையில் அனைத்து இறுதிகட்ட பணிகளும் தற்போது நிறைவுபெறும் தருவாயில் இருக்கிறது