அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இன்று பெரும்பான்மையான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனை கண்காணிப்பதற்காக கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் இன்று கார் மூலம் பல்வேறு பகுதிகளுக்கும் சென்றார்.
பண்ருட்டியை அடுத்த திருவதிகை ரெயில்வே கேட்டை அந்த கார் கடக்க முயன்றது. அப்போது விழுப்புரத்திலிருந்து மயிலாடு துறை நோக்கி பாசஞ்சர் ரெயில் வந்தது. ஆனால் ரெயில்வே கேட்டில் இருந்த ஊழியர் தூங்கிவிட்டார். இதனால் அந்த ரெயில்வே கேட் மூடாமல் இருந்தது.
சற்று தொலைவில் ரெயில் வருவதை கண்டு கலெக்டரின் கார் டிரைவர் அதிர்ச்சியடைந்து காரை நிறுத்தினார். கலெக்டர் காரில் உள்ள சைரன் விளக்கை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர், விபரீதத்தை புரிந்து ‘சடன் பிரேக்’ போட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் மயிரிழையில் கலெக்டர் உயிர் தப்பினார்.
பின்னர்...
more... கலெக்டர் காரில் இருந்து இறங்கி ரெயில்வே கேட்டுக்கு சென்றார். தூங்கிகொண்டிருந்த கேட் கீப்பரை எழுப்பி ரெயில்வே கேட்டை மூடுமாறு கூறினார். பின்னர் அந்த ரெயில் பயணத்தை தொடர்ந்தது. ரெயில்வே கேட்ட திறந்த பிறகு கலெக்டர் கார் அதனை கடந்து சென்றது.
சம்பவம் பற்றி ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்த பண்ருட்டி தாசில்தார் மோகன் உத்தரவிட்டுள்ளார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"